எந்த நிபந்தனையும் இன்றி ஓபிஎஸிடம் பேச்சுவார்த்தை: அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்!
எந்த நிபந்தனையும் இன்றி ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதிமுக அம்மா அணியின் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை எந்த நிபந்தனையும் இன்றி ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதிமுக அம்மா அணியின் அமைச்சரான செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இரண்டு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற பன்னீர்செல்வம் கூறிய கருத்தை வற்வேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சி மற்றும் ஆட்சி அதிகாரம் சசிகலா குடும்பத்தினரின் கைக்கு சென்றது. இதையடுத்து முதல்வராக சசிகலா முயன்றதால் அதிமுக இரண்டாக உடைந்து ஓபிஎஸ் தலைமையிலான ஒரு அணியாகவும் சசிகலா தலைமையிலான ஒரு அணியாகவும் செயல்பட்டுகிறது.
தாங்கள் தான் உண்மையான அதிமுக எனக்கூறி வரும் ஓபிஎஸ் அணி கட்சியின் அதிகாரம் சின்னம் உள்ளிட்டவற்றை தங்களுக்கே அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக அம்மா அணி இணைய வந்தால் எந்த நிபந்தனையும் இன்றி சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நேற்று தெரிவித்தார்.

நேற்று ஆலோசனை
இதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கமணி வீட்டில் நேற்று அமைச்சர்கள் ஆலோசனை நடைபெற்றது. அப்போது இரு அணிகளும் இணைவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஓபிஎஸ்க்கு வரவேற்பு
இந்நிலையில் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இரண்டு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பன்னீர்செல்வம் கூறிய கருத்தை வரவேற்பதாகவும் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

தொண்டர்கள் விருப்பம்
இதனிடையே இன்று சென்னை போர்க்கப்பலில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜு மீண்டும் பேசினார். அப்போது இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்று அவர் கூறினார்.

இரட்டை இலை மீட்டெடுக்கப்படும்
கட்சி ஒன்றிணைய இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என அவர் கூறினார். இரு அணிகளும் ஒன்றிணைந்ததால் தான் இரட்டை இலை சின்னம் மீட்டெடுக்கப்படும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications