தமிழக அரசு சார்பில்... மனோரமா உடலுக்கு அமைச்சர் வளர்மதி, செல்லூர் ராஜூ நேரில் அஞ்சலி
சென்னை: மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் வளர்மதி மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புரிந்தவர் நடிகை மனோரமா. தமிழ் சினிமாவில் என்றென்றும் தனக்கென தனி முத்திரை படைத்து, அனைவராலும் ஆச்சி என செல்லமாக அழைக்கப்பட்ட இவர், நேற்றிரவு மாரடைப்பால் காலமானார்.

சென்னை தி.நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக மனோரமாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் மனோரமாவின் உடலுக்கு அமைச்சர்கள் வளர்மதி, செல்லூர் ராஜு ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். உட்பட ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமைக்குரியவர் மனோரமா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications