வாக்காளர்களுக்கு லஞ்சம்-செங்கோட்டையன் உள்பட 7 அமைச்ச்சர்களிடம் சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்
பணப்பட்டுவாடா தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட 7 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார
சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 7 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் புதன்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஆர்.கே.நகர் சிக்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் 35 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலை.துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோரின் வீடுகள், அவர்களது உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு ரூ.85 கோடி பணம் விநியோகிக்கும் ஆவணங்கள் சிக்கின.
இதனிடையே ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் பேசுகையில், வாக்காளர்களுக்கு பணம் தந்தது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இது போதாது. பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 7 பேரையும் கைது செய்து சிபிஐ விசாரணை வளையத்தில் கொண்டு வரவேண்டும். மேலும் பணப்பட்டுவாடா புகாரில் சிக்கி தமிழகத்தை மற்ற மாநிலங்களின் முன்பு அசிங்கப்படுத்திவிட்டதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் ஸ்டாலின்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications