நதிநீர் இணைப்பை விரைவுபடுத்த வலியுறுத்தி மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
நதி நீர் இணைப்பில் கவனம் செலுத்துங்கள் என்று பிரதமருக்கு முக ஸ்டாலின் கடிம் எழுதியுள்ளார்.
சென்னை: நதிகளை இணைப்பதில் கவனம் செலுத்தி அந்த பணிகளை அதிவேகமாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமருக்கு முக ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பயிர் சாகுபடியின் போது காவிரி நதி நீரை விவசாயிகள் எதிர்பார்ப்பதும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் கர்நாடகா அரசு தண்ணீர் விட மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இதுபோதாக்குறைக்கு கேரளா அரசும், ஆந்திரா அரசும் முல்லை பெரியாறு மற்றும் பாலாற்றின் மீது தடுப்பணை கட்டுவது உள்ளிட்டவை நடைபெற்று வருவதால் நதி நீர் இணைப்புதான் இதற்கு உன்னத தீர்வு என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அதற்கான பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை.
தமிழக விவசாயிகள் வறட்சி காரணமாக கொத்து கொத்தாக தற்கொலை செய்து கொண்டனர். ஆனாலும் மத்திய அரசு அவர்களுக்கு வறட்சி நிவாரணத்தை சரிவர வழங்கவில்லை. பயிர்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 41 நாள்கள் போராடினர். எனினும் பலனில்லை.
இந்நிலையில் நதி நீர் இணைப்பு தொடர்பாக பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், நதி நீர் இணைப்புத் திட்டங்களில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.
தமிழக நதி நீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் பெற்று நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது. தமிழக நதி நீர் இணைப்புத் திட்டங்களை அதிவேகமாக நிறைவேற்ற வேண்டும்.
நதி நீர் இணைப்பு மாநிலங்கள் இடையேயான நதி நீர்பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். நதிகள் இணைப்பால் தமிழக விவசாயிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறுவர் என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications