புதிய ரூபாய் நோட்டுகளில் இந்தி திணிப்பா?- தமிழ் அமைப்பு ஆவேசம்!
இதுவரை இல்லாதவாறு புதிய 500, 1000 ரூபாய் நோட்டுக்களில் இந்தி (தேவநாகிரி) எண்களை மத்திய அரசு புகுத்தி உள்ளது என தமிழர் பண்பாட்டு நடுவம் அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: இந்தியா இந்திக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் எனில் மற்ற மொழிகளை எல்லாம் இரண்டாம் தர மொழிகளாக இந்திய அரசு பாவிக்கிறதா என தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களில் பல மாற்றங்களை செய்துள்ளது . இதுவரை இல்லாதவாறு இந்த ரூபாய் தாள்களில் இந்தி (தேவநாகிரி) எண்களை புகுத்தி உள்ளது. மேலும் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் செய்தியையும் இந்தியில் மட்டுமே அச்சிட்டுள்ளது. இதற்கு எந்த ஆங்கில மொழிப் பெயர்ப்பையும் அச்சிடவில்லை.

இந்தியா என்பது பல மொழிகள் பேசும் தேசிய இனங்களின் கூட்டமைப்பு. இந்தியாவிற்கு என்று எந்த ஒரு தனிப்பட்ட தேசிய மொழியும் இல்லை. அலுவல் மொழிகளாக மட்டுமே இந்தியும் ஆங்கிலமும் உள்ளது. இருப்பினும் ரூபாய் தாள்களில் சர்வதேச வழக்கத்தில் உள்ள எண்களை பயன்படுத்த வேண்டும் என்று அரசியல் சாசன சட்ட விதி 343 சொல்கிறது. விதி 343 பிரிவு 1-ல் அரசியல் சாசனத்தில் சீர்திருத்தம்கூட (Constitutional Amendment) செய்யாமல் புதிதாக வெளியிடப்பட்ட ரூபாய் தாள்களில் இந்தி தேவநாகரி எண்ணை பயன்படுத்தியிருப்பது திணிப்பு மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்பு சாசனத்தை மீறிய செயலாகும்.
ரூபாய் தாள்களில் இந்தி எண்களை இந்திய அரசு பயன்படுத்துமே எனில் தமிழ் எண்களையும் இந்திய அரசு பயன்படுத்த வேண்டும். தமிழ் மொழி இந்திக்கும் மூத்த மொழியாக விளங்குவது மட்டுமல்லாது பல இந்திய மொழிகளுக்கு தாய் மொழியாகவும் விளங்குகிறது. தமிழ் மொழிக்கு வழங்கப்படாத சிறப்பு இந்தி மொழிக்கு மட்டும் ஏன் வழங்கப்பட வேண்டும்? இந்தியா இந்திக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் எனில் மற்ற மொழிகளை எல்லாம் இரண்டாம் தர மொழிகளாகவும் மற்ற மொழி பேசும் மக்களை இரண்டாம் தர குடிமக்களாகவும் இந்திய அரசு பாவிக்கிறது என்பதாகவே பொருள் கொள்ள வேண்டி உள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை கடைப்பிடிக்க வேண்டிய இந்திய அரசு இத்தகைய பக்க சார்பான நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புதிய ரூபாய் தாள்களில் இந்திய அரசு இப்படியான இந்தித் திணிப்பை உடனே நீக்க வேண்டும். அவ்வாறு நீக்க முடியாதென்றால் தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழிகளின் எண்களையும் ரூபாய் தாள்களில் அச்சிட வேண்டும். 'தூய்மை இந்தியா ' திட்டத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எல்லா உள்நாட்டு வெளிநாட்டு மக்களும் அறியும் வண்ணம் வெளியிட வேண்டும் என்று நடுவண் அரசுக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் கோரிக்கை வைக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications