சைதாப்பேட்டையில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம்.. போக்குவரத்து ஸ்தம்பிப்பு
சென்னை சைதாப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் இன்று கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை : சென்னை சைதாப்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த 20ம் தேதி முதல் தமிழகமெங்கும் அரசுப் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த போராட்டத்தில் மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பலதரப்பட்ட இயக்கங்களும் போராட்டத்தில் குதித்து உள்ளன. இதனால் தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் சென்னை சைதாப்பேட்டையில் தொழிற்சங்கத்தினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறுதல், அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 18 ஆயிரம் வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் சாலை மறியலால் அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 1000 பேரையும் கைது செய்தனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதே போல தமிழகத்தில் பல பகுதிகளிலும் தொழிற்சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி உள்ளனர். விழுப்புரத்தில் 250 பேரும், ராணிப்பேட்டையில் 200 பேரும் கைதாகி உள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications