தமிழக ஏடிஎம்களிலும் பணத்தட்டுப்பாடு.. எங்கெல்லாம் பிரச்சனை நிலவுகிறது?
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்தியாவில் திடீர் என்று ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஹைதராபாத்தில் தொடங்கிய இந்த தட்டுப்பாடு தற்போது இந்தியா முழுக்க பரவி உள்ளது. இதனால் மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்படுமா என்ற பதற்றம் உருவாகி உள்ளது.

தமிழ்நாட்டிலும் கூட பணப்புழக்கம் குறைந்துள்ளது. எந்த ஏடிஎம் சென்றாலும் பணம் எடுக்க முடியவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது தற்காலிகமான பிரச்சனை என்று அருண் ஜெட்லி கூறியிருந்தாலும் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் வேலூர், ஆம்பூர், திருவண்ணாமலையில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்கள், பணம் இல்லாமல் இருக்கிறது. அதேபோல் சென்னையில் மக்கள் அதிக பணம் எடுக்கும் ஏடிஎம்களில் பணம் இல்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
திருநெல்வேலி உள்ளிட்ட தென்தமிழகங்களிலும் சில இடங்களில் பணம் இல்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக பெரிய தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகளில்தான் பணம் நிரப்பப்படவில்லை. இதனால் மீண்டும் பணமதிப்பிழப்பு ஏற்படுமா என்ற அச்சம் உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications