முரசொலி பவள விழா: அரசியல், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு வாழ்த்தியவர்களுக்கு நன்றி.. கருணாநிதி உருக்கம்
அரசியல் கட்சி பிரச்சனைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்த்தியவர்களுக்கு நன்றி என முரசொலி பவளவிழாவிற்கு வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் திமுக தலைவர் கருணாநிதி உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை: முரசொலி பவளவிழாவிற்கு வாழ்த்துக் கூறியவர்களுக்கு, "அரசியல் கட்சி பிரச்சனைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்த்தியவர்களுக்கு நன்றி" என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
1942ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி அன்று முரசொலி பத்திரிகை தொடங்கிய நாளாகும். கையெழுத்துப் பிரதி வடிவத்தில் மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த முரசொலி 1948ல் வார இதழாகவும், 1960ல் நாளேடாகவும் அச்சில் வெளிவரத் தொடங்கியது.

திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி வெளியாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. முரசொலியின் பவள விழா ஆண்டு திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றும் நாளையும் முரசொலியின் பவள விழா பிரமாண்டமாக திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முரசொலியின் பவளவிழாவிற்கு வாழ்த்துக் கூறியவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார். அவரது நன்றி நவிலலில், "கழக உடன்பிறப்புகளையும்-அன்பெனும் அமுதூட்டி ஆதரவுக் கரம் நீட்டித் துணை நிற்கும் கோடிக்கணக்கான தமிழ் பெருமக்களையும்-அரசியலுக்கும் கட்சி பிரச்சினைகளுக்கும் அப்பாற்பட்டு வாழ்த்தி அருளுகின்ற அனைத்து நெஞ்சங்களையும் தூய துணைகளாகக் கொண்டு இத்தனை ஆண்டுகளைத் தாண்டிவிட்டோமே என்ற மலைப்புடன் திரும்பிப் பார்க்கிறேன், என் விழிகள் மட்டும் விரித்திடவில்லை-பெருமூச்சு காரணமாக என் சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன.
"இந்தத் துணைகள் என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டுமென்ற வேண்டுகோளுடன், எஞ்சியுள்ள பயணத்தைத் தொடருகிறேன். என் கடன் பணி செய்து கிடப்பதே!" என்று உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications