மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது கொலை முயற்சி வழக்கு
மதுரை: மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர் கல்யாணி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(67). மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அவர் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவராகவும், காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழுவின் அமைப்பாளராகவும் உள்ளார்.

அவர் நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு அருகில் நடைபயிற்சி மேற்கொண்டபோது அவரை மர்ம நபர்கள் தாக்கினர். இதில் அவரின் 2 கைகளும் முறிந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் பற்றி அவர் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தவறான தகவல்களை தந்து துணைவேந்தர் பதவிக்கு வந்துள்ளார். இது குறித்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அவரது நிர்வாக திறமையின்மையால் நடந்து வரும் சீர்கேடுகளை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு என்ற அமைப்பு மூலமாக அம்பலப்படுத்தி வருகிறேன்.
இதற்கு பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் எனக்கு எதிராக பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் துணைவேந்தர் தரப்பினர் பலமுறை என்னை மிரட்டினர்.
இந்த நிலையில், கடந்த 15-ந் தேதி எனது பேட்டி ஒரு நாளிதழில் வெளியானது. அதைத்தொடர்ந்து கடந்த 16-ந் தேதி காலை நான் வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, 2 மர்ம நபர்கள் எனக்கு பின்னால் இருந்து என்னை உருட்டுக்கட்டையால் தாக்கினர். அவர்கள், ‘‘துணை வேந்தருக்கு எதிராக பேட்டி கொடுக்கிறாயா, உன்னை கொல்லாமல் விடமாட்டோம்" என்று சொல்லி நான் மயங்கி விழும் வரை சரமாரியாக தாக்கினர்.
இந்த தாக்குதலுக்கு காரணமான மேற்சொன்ன நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கல்யாணி, பதிவாளர் முத்துமாணிக்கம், இளைஞர் நலத்துறை பேராசிரியர் செல்லதுரை, மக்கள் தொடர்பு அலுவலர் அறிவழகன், ஓய்வு பெற்ற ஊழியர் எஸ்.வி.கே. செல்வராஜ் மற்றும் 2 பேர் மீது கொலை முயற்சி, கொலை செய்யத்தூண்டுதல் உள்ளிட்ட இந்திய தண்டனைச்சட்டம் 109, 294(பி), 307, 324 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துணை வேந்தர் கல்யாணி மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மருமகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications