முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இல்லத்தில் போய் சந்தித்த சீமான்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று சந்தித்து பேசினார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சீமான் சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தார்.

naam tamilar party leader seeman meet cm Eadappadi palanisamy

இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " மலேசியாவிலேயே தைப்பூசத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே தைபூசத்திற்கு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். அதை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டத்தை ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தோம்.. அதையும் பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

தஞ்சையில் தமிழில் குடமுழுக்கு நடப்பதை மறைக்கவே திடீரென ரஜினி வெளியே வந்து பேட்டி கொடுத்ததாக குற்றம்சாட்டினார்.

விஜய்யை விட அதிக சம்பளம் வாங்குற நடிகர் வீட்டில் ஏன் ரெய்டு நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய சீமான், . ஒரு படத்திற்கு மட்டும், ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.126 கோடியை அவர் சம்பளமாக வாங்கி உள்ளார்.. அடுத்த படத்துக்கும் வாங்கியிருக்கிறார். 66 லட்சம் வரி பாக்கி கட்டணும் என்று அந்த நடிகருக்கு இருந்தது. அதையும் வேண்டாம்னு சொல்லிவிட்டார்கள் என ரஜினியை மறைமுகமாக சாடினார்.

அன்புச்செழியன் சினிமா பைனான்சியர் இல்லை. அவர் சினிமாவிற்கு பைனான்ஸ் தருவதில்லை என்றும் சீமான் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+