பரோலில் விடுவிக்க கோரி நளினி மனு: சிறைத்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
Subscribe to Oneindia Tamil

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தூக்குத் தண்டனை கைதியான அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் உள்ளார்.
இந்நிலையில், 90 வயதான தனது தந்தை சங்கர நாராயணனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனிக்க, ஒரு மாதம் பரோலில் விடுவிக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக பிப்ரவரி 11ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேலூர் சிறைத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications