நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மூடும் வரை வீடுவாசல் செல்லமாட்டோம் #NeduvasalProtest
வாடி வாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்ல மாட்டோம் என்று போராடிய இளைஞர்கள், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் வரை வீடு வாசலுக்கு செல்ல மாட்டோம் என்று இளைஞர்கள் போராடி வருகின்றனர
புதுக்கோட்டை: மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் வரை நெடுவாசலை விட்டு வீடு வாசலுக்கு செல்ல மாட்டோம் என்று இளைஞர்கள் போராடி வருகின்றனர்.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் மட்டுமல்லாது தங்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்பது கிராம மக்களின் கருத்து.
எனவே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் மாணவர்கள் கருத்துக்களை பதிவிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம் போல மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறிவருகின்றனர்.
|
நெடுவாசல் போராட்டம்
சமூக வலைத்தளங்களில் #SaveNeduvaasal , நெடுவாசல் போராட்டம் என்று ஹேஷ்டேக் போட்டு கருத்துக்களையும், கார்டூன்களையும் பதிவிட்டு வருகின்றனர். விவசாயிகளின் பிரச்சினையை இதை விட யாராலும் கூற முடியாது.
|
மாணவர்கள் போராட்டம்
விவசாய நிலத்தை அளிக்க நினைச்சா போராட்டம் வேற மாதிரி இருக்கும்னு மிரட்டிட்டு போறாங்க என்று மாணவர்களின் போராட்டத்திற்கு மீம்ஸ் போட்டிருக்காங்க.
|
அடுத்த தலைமுறைக்கான போராட்டம்
எந்த போராட்டம் என்றாலும் தேவர்மகன் சிவாஜியும், கமலும் இடம் பெறத் தவறுவதில்லை. இது அடுத்த தலைமுறையை காக்கும் போராட்டம் என்று பதிவிட்டுள்ளனர்.
|
விவசாயம் காக்கும் போராட்டம்
இது வீண் போராட்டம் அல்ல... வருங்காலம் கேள்விக்குறி ஆகாமல் இருப்பதற்காகவே இந்த போராட்டம் நடத்துகிறோம் என்று கூறியுள்ளனர்.
|
முடிவுக்கு வராது
மத்திய அரசு திட்டத்தைக் கைவிடும் வரை போராட்டம் முடிவுக்கு வராது என்று கூறியுள்ளனர் மாணவர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications