ஆர்.கே நகர் மக்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.. அடித்து சொல்கிறார் 'மண்ணின் மைந்தன்' மருதுகணேஷ்
ஆர்.கே. நகர் தொகுதி மக்களை பணத்தைக் கொடுத்து யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்று திமுக வேட்பாளர் மருது கணேஷ் தெரிவித்தார்.
சென்னை: ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி மக்களின் மனநிலையை நன்கு அறிந்துள்ளதால் அவர்களை பணத்தால் யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பல முனை போட்டி நிலவுகிறது.
எனினும் அதிமுகவின் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, திமுக ஆகிய வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருதுகணேஷ்
இந்நிலையில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் திமுகவின் சார்பில் வழக்குரைஞரும், பத்திரிகை நிருபருமான மருதுகணேஷ் போட்டியிடுகிறார்.

50000 வாக்கு வித்தியாசமாம்
இதுகுறித்து டிடிவி தினகரன் தெரிவிக்கையில், நான் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். திமுகதான் எங்களுக்கு எதிரி. மற்ற கட்சிகள் அனைத்தும் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று வெளிப்படையாக கேட்டுக் கொண்டார்.

தொகுதிவாசி
இந்நிலையில் மருதுகணேஷ் கூறுகையில், ஆர்.கே நகர் தொகுதியில் பிறந்து வளர்ந்த சாமானியன் நான். பணத்தை காட்டிலும் மக்களின் மனதை சம்பாதித்துள்ளேன். மண்ணின் மைந்தனான என்னை அறிந்து வைத்திருக்கும் ஆர்.கே.நகர் மக்களை, பணத்தைக் கொடுத்து யாரும் விலைக்கு வாங்க முடியாது.

பிரசாரம்
தினகரன் என்ன, யார் வந்தாலும் அவர்களை வீழ்த்துவேன். திமுகவின் சாதனைகளையும், பினாமி அரசின் மக்கள் விரோத போக்கையும் எனது பிரசாரத்தில் முன்வைத்து வாக்கு சேகரிப்பேன் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications