ஆர்.கே நகர் மக்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.. அடித்து சொல்கிறார் 'மண்ணின் மைந்தன்' மருதுகணேஷ்
ஆர்.கே. நகர் தொகுதி மக்களை பணத்தைக் கொடுத்து யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்று திமுக வேட்பாளர் மருது கணேஷ் தெரிவித்தார்.
சென்னை: ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி மக்களின் மனநிலையை நன்கு அறிந்துள்ளதால் அவர்களை பணத்தால் யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பல முனை போட்டி நிலவுகிறது.
எனினும் அதிமுகவின் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, திமுக ஆகிய வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருதுகணேஷ்
இந்நிலையில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் திமுகவின் சார்பில் வழக்குரைஞரும், பத்திரிகை நிருபருமான மருதுகணேஷ் போட்டியிடுகிறார்.

50000 வாக்கு வித்தியாசமாம்
இதுகுறித்து டிடிவி தினகரன் தெரிவிக்கையில், நான் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். திமுகதான் எங்களுக்கு எதிரி. மற்ற கட்சிகள் அனைத்தும் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று வெளிப்படையாக கேட்டுக் கொண்டார்.

தொகுதிவாசி
இந்நிலையில் மருதுகணேஷ் கூறுகையில், ஆர்.கே நகர் தொகுதியில் பிறந்து வளர்ந்த சாமானியன் நான். பணத்தை காட்டிலும் மக்களின் மனதை சம்பாதித்துள்ளேன். மண்ணின் மைந்தனான என்னை அறிந்து வைத்திருக்கும் ஆர்.கே.நகர் மக்களை, பணத்தைக் கொடுத்து யாரும் விலைக்கு வாங்க முடியாது.

பிரசாரம்
தினகரன் என்ன, யார் வந்தாலும் அவர்களை வீழ்த்துவேன். திமுகவின் சாதனைகளையும், பினாமி அரசின் மக்கள் விரோத போக்கையும் எனது பிரசாரத்தில் முன்வைத்து வாக்கு சேகரிப்பேன் என்றார் அவர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications