அதிமுக கூட்டணியை உடைக்க யாருக்கும் திராணி கிடையாது… ராஜேந்திர பாலாஜி பலே பேச்சு
கமுதி: மத்தியில் பாஜக ஆட்சி அமையும் என்றும் அதிமுக சார்பில் மத்திய அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த கோட்டைமேட்டில் நடந்த அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் அவர் கலந்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்கவே, அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி பலப்படுத்தி வருவதால் தீவிரவாதிகள் பயந்து ஓடுவதாகவும், இதனால் இந்தியாவின் டாடியாக மோடி இருப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
ராமதாஸ் வீட்டில் குருவுக்கு தனி சாப்பாடு போட்டாங்க.. அதுக்குப் பிறகுதான்.. தங்கை கதறல்!
அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது அதிமுக சார்பில் மத்தியில் ஆட்சி அமையும் என்றும் கூறினார். அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என இரு முனை போட்டி தான் நடைபெறும்.
தேர்தல் களத்தில் டிடிவி காணாமல் போய்விடுவார் என்றும் விமர்சனம் செய்தார். அதிமுக கூட்டணியை உடைக்க யாருக்கும் திராணி இல்லை; சாணக்கியத் தனமும் இல்லை என்றும் தெரிவித்தார். 7 தமிழர் விடுதலையில் முட்டுக்கட்டை போட்டு திமுகவும் காங்கிரசும் நாடகமாடி வருவதாகவும் குற்றம் சாட்டினார் .