Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிடிவி தினகரனின் திருச்சி பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு

திருச்சி உழவர் சந்தையில் டிடிவி தினகரன் நடத்துவதாக இருந்த பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி உழவர் சந்தையில் டிடிவி தினகரன் வரும் 16-ஆம் தேதி நடத்துவதாக இருந்த பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அனிதா என்ற மாணவி கடந்த 1-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

No permission for TTV Dinakaran to organise public meeting in Trichy

எடப்பாடி அரசுக்கு குடைச்சல் ஏற்படுத்தும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக செப்டம்பர் 9-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். உச்ச நீதிமன்றம் நீட் தேர்விற்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடத்த தடை விதித்தது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து இந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் தினகரன் கூறினார். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக வரும் 16-ஆம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அந்த தேதியில் அதே இடத்தில் வேறு ஒரு அமைப்பினர் போராட்டம் நடத்தவுள்ளதால் டிடிவி தினகரன் நடத்தும் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+