படித்து பல வருடம் ஆகிறது ... இன்னும் கிடைக்கவில்லை உதவி தொகை... நெல்லை மாணவர்கள் குமுறல்
படித்து முடித்து பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை தங்களுக்கு கிடைக்க வேண்டிய உதவித்தொகை இன்னும் கிடைக்கவில்லை என்று நெல்லை மாணவர்கள் தெரிவித்தனர்.
நெல்லை: மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை படித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் வழங்கப்பட வில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பள்ளி மாணவ, மாணவிகள் இடை நிற்றலை தவிர்க்கும் வகையில் 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 5 ஆயிரம் கல்வி உதவி தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 10-ஆம் வகுப்பு படிக்கும் போது ரூ.1500-ம், 11-ஆம் வகுப்பில் ரூ.1500, 12-ஆம் வகுப்பில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் முக்கூடல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2015-ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்த 15 பேருக்கு உதவி தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மாணவ, மாணவிகள் கல்வி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் சரியான பதில் இல்லை. இதையடுத்து தங்களது வங்கி கணக்கு மற்றும் பெயரை எழுதி முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பினர்.
அதற்கு 15-6-2016ல் சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயராஜ் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என தெரிவித்திருந்தார். அவர் பதில் அளித்து ஓர் ஆண்டு ஆகியும் இதுவரை மாணவர்களது வங்கி கணக்குக்கு உதவி பணம் வந்து சேரவில்லை.
படிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. இதனால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் ஏமாற்றத்திலும், கோபத்திலும் உள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications