காவிரி: ஏப். 11 முழு அடைப்புப் போராட்டத்துக்கு வணிகர் சங்கம் ஆதரவு இல்லை: வெள்ளையன்
11ம் தேதி நடக்கும் முழுஅடைப்புக்கு ஆதரவு இல்லை என தா.வெள்ளையன் கூறியுள்ளார்.
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப். 11-ந் தேதி நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்று வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார். ஆனால் அதேநேரத்தில், அரசியல் சாராத அனைத்து காவிரி விவகார போராட்டங்களுக்கும் தமது ஆதரவு என்றும் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே வரி என்று ஜிஎஸ்டியை அறிமுகம் செய்தது. சில்லரை வணிகர்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்று வியாபாரம் பார்ப்பதில்லை. இதனால் சில்லரை வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இ-வே பில்லை கைவிட வேண்டும். மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. நியூட்ரினோ, ஈத்தேன், மீத்தேன், ஸ்டெர்லைட் திட்டங்களை தமிழகத்தில் திணிக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடக்கும் கடையடைப்பு போராட்டங்களுக்கு முழு ஆதரவு உண்டு. வருகிற 11ம் தேதி நடக்கும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கிடையாது.
அரசியல் சாராத அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு உண்டு. மத்திய அரசு தனது போக்கை மாற்றாவிட்டால் தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும்.
இதேநிலை நீடித்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு என்னவாகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மே 5ல் நடக்கும் மாநாட்டில் சில்லறை வணிகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த்சின்ஹா கலந்து கொண்டு பேச உள்ளார்.
திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றத்தில் வணிகர்களை கட்டாயமாக மாற்ற முயற்சித்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கும். இவ்வாறு வெள்ளையன் தெரிவித்தார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications