காவிரி: ஏப். 11 முழு அடைப்புப் போராட்டத்துக்கு வணிகர் சங்கம் ஆதரவு இல்லை: வெள்ளையன்
11ம் தேதி நடக்கும் முழுஅடைப்புக்கு ஆதரவு இல்லை என தா.வெள்ளையன் கூறியுள்ளார்.
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப். 11-ந் தேதி நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்று வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார். ஆனால் அதேநேரத்தில், அரசியல் சாராத அனைத்து காவிரி விவகார போராட்டங்களுக்கும் தமது ஆதரவு என்றும் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே வரி என்று ஜிஎஸ்டியை அறிமுகம் செய்தது. சில்லரை வணிகர்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்று வியாபாரம் பார்ப்பதில்லை. இதனால் சில்லரை வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இ-வே பில்லை கைவிட வேண்டும். மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. நியூட்ரினோ, ஈத்தேன், மீத்தேன், ஸ்டெர்லைட் திட்டங்களை தமிழகத்தில் திணிக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடக்கும் கடையடைப்பு போராட்டங்களுக்கு முழு ஆதரவு உண்டு. வருகிற 11ம் தேதி நடக்கும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கிடையாது.
அரசியல் சாராத அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு உண்டு. மத்திய அரசு தனது போக்கை மாற்றாவிட்டால் தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும்.
இதேநிலை நீடித்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு என்னவாகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மே 5ல் நடக்கும் மாநாட்டில் சில்லறை வணிகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த்சின்ஹா கலந்து கொண்டு பேச உள்ளார்.
திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றத்தில் வணிகர்களை கட்டாயமாக மாற்ற முயற்சித்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கும். இவ்வாறு வெள்ளையன் தெரிவித்தார்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications