ஏதாவது செய்து எங்களை காப்பாற்றுங்கள்... கமலிடம் கண்ணீர் விட்ட பொதுமக்கள்- வீடியோ!
எண்ணூர் பகுதியில் இன்று காலையில் கள ஆய்வு செய்த நடிகர் கமல்ஹாசனிடம் ஏதாவது செய்து எங்களை இந்த சுற்றுச்சூழல் மாசில் இருந்து காப்பாற்றுங்கள் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் கண்ணீர் வடித்தனர்.
Recommended Video

சென்னை : சென்னை எண்ணூர் பகுதியில் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதை நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் நடிகர் கமல்ஹாசனிடம் ஏதாவது செய்து எங்களை இந்த மாசில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கதறினர்.
திருவொற்றியூர் அடுத்த எண்ணூர் பகுதியில் நெட்டுக்குப்பம், முகத்துவார குப்பம், காட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எண்ணூர் முகத்துவார பகுதியில் அனல்மின்நிலைய கழிவுகள் கொட்டப்படுவதால் அலையாத்திக் காடுகள் அழிந்து மீன்வளம் குறைந்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கடந்த மழையின் போது தென்சென்னை பாதிக்கப்பட்டது போல இந்த வடகிழக்குப் பருவமழையால் வடசென்னை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுவதை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்வதற்காக அவர் இன்று அதிகாலையில் எண்ணூர் பகுதிக்கு சென்று சுற்றுச்சூழல் மாசு குறித்து நேரில் பார்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் கருத்துகளை கேட்டார்.
அனல் மின்நிலையத்தில் இருந்து கழிவு எவ்வாறு கலக்கிறது. அந்தக்கழிவால் கொசஸ்தலை ஆறு எவ்வாறு சாம்பல் சூழ உள்ளது என்பதையும் கமல்ஹாசன் பார்த்தார். இதே போன்று அந்தப் பகுதியில் செய்யப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளையும் அவர் நேரில் பார்த்தார். அப்போது அங்கு கூடிய அந்தப் பகுதி மக்கள் சுற்றுச்சூழல் மாசால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கமலிடம் கண்ணீர் விட்டனர்.
எண்ணூர் துறைமுகத்தை பார்வையிட்ட... by oneindiatamil
மீன்வளம் அதிக அளவில் இருந்த இந்தப் பகுதி தற்போது வாழத் தகுதியை இழந்து வருவதாகவும் பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கு மக்கள் ஆளாவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர். ஏதாவது செய்து இந்த சுற்றுச்சூழல் மாசில் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என்று மக்கள் கமல்ஹாசனிடம் கண்ணீருடன் கேட்டனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications