சென்னையில் மழை எப்படி இருக்கும்? என்ன சொல்கிறது நார்வே வானிலை மையம்?
சென்னையில் வரும் செவ்வாய்க்கிழமை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை :வரும் செவ்வாய்க்கிழமை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. தொடங்கியது முதலே வெளுத்து வாங்கிய மழை தற்போது தீவிரமடைந்துள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் மக்களை மகிழ்விக்கும் வகையில் நல்ல மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

இன்று தலைக்காட்டும் வெயில்
சென்னையில் நேற்று முழுவதும் இடைவிடாமல் பெய்த மழை இன்று சற்று ஓய்ந்துள்ளது. காலை முதல் வெயில் தலைக்காட்டுகிறது.

நவ.4 வரை மழை
அதேநேரத்தில் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 4ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

என்ன சொல்கிறது நார்வே?
ஆனால் நார்வே வானிலை மையமோ வரும் செவ்வாய்க்கிழமை வரை சென்னையில் மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. கனமழை பெய்யக்கூடும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது.

3 நாள் மழை இருக்காது
அவ்வப்போது குளிர்ந்த காற்று வீசும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் வரும் 8 ஆம் தேதி புதன்கிழமை முதல் 10ஆம் தேதி வெள்ளிக் கிழமை வரை மழைக்கு வாய்ப்பில்லை என்றும் மேகமூட்டம் வேண்டுமானால் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துல்லியமாக கணித்த நார்வே
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளப்பெருக்கை நார்வே வானிலை மையம் முன்கூட்டியே துல்லியமாக கணித்திருந்தது. அதேபோல் இந்த ஆண்டும் கணித்துள்ளது.

பொருத்திருந்து பார்ப்போம்
அதன்படி இந்த வாரத்தில் சென்னையில் மழை குறைந்தே காணப்படும் என கூறியுள்ளது. பொருந்திருந்துப் பார்ப்போம் இந்த ஆண்டும் நார்வே வானிலை மைய கணிப்பு மெய்யாகிறதா என்று..
-
தென்மேற்கு பருவமழை தாமதமாவது ஏன்? புதிய தேதியை அறிவித்த வானிலை மையம்.. அதிகரிக்கும் எல் நினோ அச்சம்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications