கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம்
அதிமுகவில் இருந்து கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் உள்ளிட்ட முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, சி. பொன்னையன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவை கைப்பற்றிய சசிகலாவுக்கு எதிராக முதலில் கலகக் குரல் எழுப்பியவர் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி. இதையடுத்து கடந்த 7-ந் தேதியன்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
இதையடுத்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் பி.எச். பாண்டியன், மனோஜ் பாண்டியன், முனுசாமி, பரிதி இளம்வழுதி உள்ளிட்டோர் ஆதரவு அளித்தனர். நாளுக்கு நாள் இந்த ஆதரவு பெருகிறது.

11 எம்.எல்.ஏக்கள், 12 எம்பிக்கள்
முதல்வர் ஓபிஎஸ்-க்கு 12 எம்பிக்கள், 11 எம்.எல்.ஏக்கள் தற்போது வரை ஆதரவு அளித்துள்ளனர். அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான மதுசூதனன், பொன்னையன், சங்கரன்கோவில் முத்துச்செல்வி உள்ளிட்ட பலரும் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்.

பொருளாளர் பதவி பறிப்பு
ஏற்கனவே முதல்வர் ஓபிஎஸ் வசம் இருந்த பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது. அதேபோல் அவைத் தலைவர் மதுசூதனன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு புதிய அவைத் தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.

ஓபிஎஸ் நீக்கம்
இந்த நிலையில் இன்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா அறிவித்திருந்தார். அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஓபிஎஸ் செயல்பட்டதாக கூறி சசிகலா நடவடிக்கை மேற்கொண்டார்.

ஆதரவாளர்கள் நீக்கம்
தற்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கேபி முனுசாமி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், பிஎச் பாண்டியன், மனோஜ் பாண்டியன், பரிதி இளம்வழுதி, ப. மோகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி, சங்கரன்கோவில் முத்துச்செல்வி, முத்துராமலிங்கம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார். இதனால் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது.
அதே நேரத்தில் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications