முதல்வராக இருந்தபோது ஓ.பி.எஸ்சுக்கு ஜெ. மரணத்தில் சந்தேகம் வரவில்லையே ஏன்? தங்கதமிழ்ச்செல்வன் நறுக்
சென்னை: 60 நாட்களாக ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது முதல்வர் பொறுப்பை கவனித்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது மர்மம் இருப்பதாக விசாரிக்க கோருகிறார் என விமர்சனம் செய்தார் அதிமுக (அம்மா) கட்சியின் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத் தமிழ்ச்செல்வன்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசிய தங்கத் தமிழ்ச்செல்வன் முன்னதாக டிடிவி தினகரனுடனும் ஆலோசனை நடத்தியிருந்தார்.

நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த தங்கத் தமிழ்ச்செல்வன், "ஜெயலலிதா அம்மா மீது சத்தியமாக கூறுகிறேன், நீதி விசாரணை வேண்டும். 60 நாட்களாக முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அப்பல்லோ மருத்துவமனை மருத்துவம் பார்த்தது. எய்ம்ஸ் டாக்டர்கள் மருத்துவம் பார்த்தனர். எய்ம்ஸ் மருத்துவமனை யார் கட்டுப்பாட்டில் உள்ளது? மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அப்படியானால் யாரையெல்லாம் விசாரணைக்கு கூப்பிடுவீர்கள். பிரதமர் மோடியை விசாரணைக்கு கூப்பிட வேண்டும், ஓ.பன்னீர்செல்வத்தை விசாரணைக்கு கூப்பிட வேண்டும், லண்டன் டாக்டர், சிங்கப்பூர் டாக்டர்களையெல்லாம் விசாரணைக்கு கூப்பிட வேண்டும். இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாக வேண்டும்.
மர்மம் மர்ம்னு எத்தனை நாளைக்குப்பா சொல்லுவீங்க?, 60 நாட்களாக முதல்வராக இருந்தபோது மர்மம் தெரியவில்லை, முதல்வர் பதவி பறிபோனதும் இப்போது மர்மம் தெரிகிறதா? இது நியாயமான முறையல்ல. இவ்வாறு தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications