ஓகி புயலால் மாயமான மீனவர்களை தேட மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு
ஓகி புயலால் மாயமான மீனவர்களை தேட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில்: ஓகி புயலால் மாயமான மீனவர்களின் நிலை குறித்து விசாரணை நடத்தவும், அவர்களை மீட்கவும் நீதிமன்றம் மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த ஆன்டோ லெனின் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மாதம் 29, 30-ஆம் தேதிகளில் ஓகி புயல் கன்னியாகுமரியை கடுமையாக தாக்கியது. இதில் மாவட்டம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

முன்னதாக கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பலர் வீடு திரும்பவில்லை. இதன் மீனவர்கள் பெரும்பாலும் 150 கடல் மைல் ஆழ்கடலில் மீன்பிடிக்க கூடியவர்கள். ஆனால் அரசு சார்பில் ஆழ்கடலில் 50 கடல் மைல் தொலைவிலேயே தேடியுள்ளனர். இதனால் ஆழ்கடல் மீனவர்கள் யாரையும் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எனது உறவினர்கள் பலரை காணவில்லை. ஹெலிகாப்டர் மூலம் தேடியது போதுமானதாக இல்லை.
புயலுக்கு முன்னதாக மீன்பிடிக்க சென்ற 550 மீனவர்களை காணவில்லை. இதனால் நீதிமன்றம் தலையிட்டு மாயமான மீனவர்கள் 550 பேரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுப்பையா, மனுவுக்கு மத்திய, மாநில உள்துறை அமைச்சர்கள், தேசிய பேரிடர் ஆணைய செயலர், மீன்வளத்துறை செயலர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications