ஓகி புயலால் மாயமான மீனவர்களை தேட மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு
ஓகி புயலால் மாயமான மீனவர்களை தேட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில்: ஓகி புயலால் மாயமான மீனவர்களின் நிலை குறித்து விசாரணை நடத்தவும், அவர்களை மீட்கவும் நீதிமன்றம் மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த ஆன்டோ லெனின் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மாதம் 29, 30-ஆம் தேதிகளில் ஓகி புயல் கன்னியாகுமரியை கடுமையாக தாக்கியது. இதில் மாவட்டம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

முன்னதாக கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பலர் வீடு திரும்பவில்லை. இதன் மீனவர்கள் பெரும்பாலும் 150 கடல் மைல் ஆழ்கடலில் மீன்பிடிக்க கூடியவர்கள். ஆனால் அரசு சார்பில் ஆழ்கடலில் 50 கடல் மைல் தொலைவிலேயே தேடியுள்ளனர். இதனால் ஆழ்கடல் மீனவர்கள் யாரையும் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எனது உறவினர்கள் பலரை காணவில்லை. ஹெலிகாப்டர் மூலம் தேடியது போதுமானதாக இல்லை.
புயலுக்கு முன்னதாக மீன்பிடிக்க சென்ற 550 மீனவர்களை காணவில்லை. இதனால் நீதிமன்றம் தலையிட்டு மாயமான மீனவர்கள் 550 பேரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுப்பையா, மனுவுக்கு மத்திய, மாநில உள்துறை அமைச்சர்கள், தேசிய பேரிடர் ஆணைய செயலர், மீன்வளத்துறை செயலர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications