நெல்லை, தூத்துக்குடி கோயில்களில் ‘அன்னதான தரம்’ குறித்து அதிகாரிகள் திடீர் ஆய்வு
நெல்லை: நெல்லை மற்றும் தூத்துக்குடியில் அன்னதானம் வழங்கப்படும் கோயில்களில் அவற்றின் தரம் குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இருக்கும் கோயில்களில் வருடம் முழுவதும் மதியவேளையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட கோயில்களின் வருவாய் மற்றும் பொருளாதார நிலைக்கு ஏற்ப தினமும் 100 அல்லது 50 பேருக்கு அன்னதானம் அளிக்கப் பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் கோயில்களில் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில் அறநிலையத் துறை அதிகாரிகள் அனைத்து கோயில்களிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மண்டல அளவில் நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள 55 கோயில்களில் அறநிலைய துறை இணை ஆணையர் அன்புமணி, மற்றும் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், முக்கிய அலுவலர்கள் அன்னதானம் நடைபெறும் கோயில்களில் முன் அறிவிப்பின்றி திடீரென மதிய வேளையில் புகுந்து ஆய்வு நடத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லையப்பர் கோவில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமிகோவில், நெல்லை வரதராஜ பெருமாள் கோயில், வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில், பாளை ராமசாமி கோவில், சாலைகுமரன் கோவில் உள்பட 29 கோயில்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி சிவன் கோயில், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் உள்ளிட்ட 16 கோயில்களிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவில், சுசீந்திரம் தானுமலை அம்மன் கோவில் உள்ளிட்ட 10 கோயில்களிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இது போல் தமிழகத்தில் அன்னதானம் நடைபெறும் அனைத்து கோயில்களிலும் உணவு தரமாகவும், ருசியாகவும் இருக்கிறதா என்றும், சாப்பிட வந்தவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications