நெசவாளர் நலத் திட்டம்.. காஞ்சிபுரத்தில் அதிகாரிகள் முகாம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: நெசவாளர்களின் நலனுக்காக 'ஹஸ்த்கலா ஷயோக் ஷிவிர்' திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன்படி, நாடு முழுக்கவுள்ள 421 கைத்தறி நெசவு மையங்களில் நெசவாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

முத்ரா திட்டத்தின்கீழ் கிடைக்கும் கடன் உதவி, வாங்குவோர்-விற்போர் நடுவேயான ஆலோசனை கூட்டங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி தருவது இந்த கூட்டங்களின் நோக்கமாகும்.
காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு வங்கிகளின் அதிகாரிகளையும் மத்திய அரசு அதிகாரிகள் வரவழைத்திருந்தனர். மத்திய ஜவுளித்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி இதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
Officials of Weavers’ Service Centre in Kancheepuram held meetings with various banks for Hastkala Sahyog Shivir. pic.twitter.com/ppYOw1ObND
— Ministry of Textiles (@TexMinIndia) October 3, 2017












Click it and Unblock the Notifications