ஜெ.மரணத்தில் நீடிக்கும் மர்மம்: நீதி விசாரணைக்கோரி ஓபிஎஸ் தரப்பு அதிமுகவினர் உண்ணாவிரதம்!!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணைக் கோரி ஓபிஎஸ் அணியை சேர்ந்த அதிமுகவினர் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்தக்கோரி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். சென்னை உட்பட 36 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா மறைந்து 90 நாட்களுக்கு மேலாகியும் அவரது மரணத்தில் நீடிக்கும் மர்மம் இன்னும் விலகாமல் உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் அதிமுக இரண்டாக உடைந்த பிறகு ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்கக்கோரி ஓபிஎஸ் தரப்பு அழுத்தம் கொடுத்து வருகிறது.
சசிகலாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்போது காபந்து முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்றார். இதையடுத்து சசிகலா ஆதரவு அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதால் இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.

அவசர அறிக்கையாலும் பிரயோஜனம் இல்லை
இந்நிலையில் தமிழக அரசு அவசர அவசரமாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவின் அறிக்கையையும் அப்பல்லோ அறிக்கையும் பெற்று அவற்றில் இருந்த சில தகவல்களை மேற்கொள் காட்டி அறிக்கை வெளியிட்டது.

அதிகரித்துள்ள சந்தேகம்
ஆனால் அதிலும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களே இருந்தன. இதனால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் அதிகரித்துள்ளது.

ஓபிஎஸ் தரப்பு உண்ணாவிரதம்
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி ஓபிஎஸ் தரப்பு அதிமுகவினர் இன்று உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 36 இடங்களில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

எழும்பூரில் ஓபிஎஸ் உண்ணாவிரதம்
எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெறும் போராட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

பொதுமக்களும் பங்கேற்பு
இதேபோல் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் தலைமையில் ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். இதில் பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications