பன்னீர்செல்வத்துடன் இருப்பவர்கள் காலாவதியான அரசியல்வாதிகள்... வைகைச்செல்வன் அதிரடி
பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பவர்கள் காலாவதியான அரசியல்வாதிகள் என வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பவர்கள் காலாவதியான அரசியல்வாதிகள் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியுள்ளார். பன்னீர்செல்வம் அதிமுக துரோகியாக மாறிவிட்டார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் தமிழக அரசியலில் அனல் பறந்து வருகிறது. சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களையும், நிர்வாகிகளையும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக மன்னார்குடி கும்பல் ஏவி வருகிறது.

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் அதிமுக செய்திதொடர்பாளர் வைகைச் செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டதாக அவர் கூறினார்.
திமுகவின் தூண்டுதலின் பேரில் பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு துரோகியாக மாறிவிட்டார். திமுகவினர் ஆதரவு அளிப்பதிலேயே அவர்கள்தான் இதற்கு காரணம் என்றும் வைகைச் செல்வன் கூறினார்.
மேலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருபவர்கள் எல்லாம் காலாவதியான அரசியல்வாதிகள் என்றும் அவர் குற்றம்சாட்டினார். வைகைச்செல்வனின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications