"மா.ம.மு." அம்மா வழி காட்டிய வரியில்லா பட்ஜெட்... தி.வேல்முருகன் பாராட்டு
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் எந்த ஒரு புதிய வரிகளும் இல்லாத மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு கூடுதல் முன்னுரிமை கொடுத்து தாக்கல் செய்யப்பட்ட 2015-16ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பாராட்டுக்கும் வரவேற்புக்குரியதாகும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இந்திய மத்திய அரசு மாநிலங்களை எப்படியெல்லாம் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. 14வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளால் மாநிலங்கள் கூடுதல் நிதிச்சுமையை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதையும் நிதிநிலை அறிக்கை விரிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கடந்த மூன்றரை ஆண்டுகாலமாக அண்ணா தி.மு.க. அரசு செயல்படுத்தி வரும் அத்தனை மக்கள் நலத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
மிகவும் பின் தங்கிய அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு தனிக் கவனம் செலுத்தும் வகையில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அப்பகுதியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். இந்தியாவிலேயே முதல் முறையாக பொருளாதாரம், புள்ளியியல் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து தர ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இதுவரை இல்லாத வகையில் வேளாண்துறைக்கு முதல் முறையாக ரூ6,613.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும். அத்துடன் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய ரூ. 25 கோடி ஒதுக்கீட்டில் 'தமிழ்நாடு விதைகள் மேம்பாட்டு முகமை' என்ற புதிய அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவித்திருப்பது வேளாண் பெருமக்களுக்கு பக்க பலமாக இருக்கும்.
அதேபோல் காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எத்தகைய முயற்சிகளை எடுத்தாலும் அவற்றைத் தடுக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகள் உட்பட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளதற்கு இந்த பிரச்சனைக்காக தொடக்கம் முதல் போராடி வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் தொழில்துறை மேம்பாடு அடைய ஒற்றைச்சாளர முதலீட்டாளர் இணையதளம் தொடங்கப்படும் என்பதும் பாராட்டுக்குரியது.
அத்துடன் பள்ளி கல்வி துறைக்கு மிக அதிகபட்சமாக ரூ20,936.50 கோடியும் ஆதி திராவிடர் நலத்துணை திட்டங்களுக்கு ரூ.11 ஆயிரத்து 274 கோடியும் ஒதுக்கீடு செய்து அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையிலான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது பாராட்டுக்குரியதாகும்.
மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் ஆணைப்படி இந்த நிதி நிலை அறிக்கையில் எந்த ஒரு புதிய வரியும் விதிக்கப்படாதது மிகவும் பாராட்டுக்குரியதாகும்.
ஏழைகளின் அரசு
புதிய வரிகளை விதிக்காததுடன் சில பொருட்களுக்கு வரி விலக்குகள் அளித்திருப்பதும் ஏழை எளிய சாமானிய மக்களின் நலனுக்கான அரசுதான் அண்ணா தி.மு.க. அரசு என்பதை நிரூபித்திருக்கிறது.
மேலும் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர் நலனுக்கு ரூ108.46 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதன் மூலம் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதற்கும் தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடுமையான நிதிச்சுமை, மத்திய அரசின் வஞ்சிப்பு, நிதி குறைப்பு இவைகளுக்கு இடையேயும் மாணவர்களுக்கான நலத் திட்டங்கள், பெண்களுக்கான சமூக நலத் திட்டங்கள் என அனைத்து துறைகளுக்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையிலான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்த முதலமைச்சர் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக!












Click it and Unblock the Notifications