குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ள சினிமா பைனான்சியர் போத்ரா மிரட்டல்.. பாரிவேந்தர் பரபர புகார்
சென்னை: குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சினிமா பைனான்சியர் போத்ரா மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பாரிவேந்தர் புகார் அளித்துள்ளார்.
போத்ராவை சமீபத்தில் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்த நிலையில் பாரிவேந்தர் இந்த புகாரை அளித்துள்ளார்.

கந்து வட்டி கேட்டு மிரட்டியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முகுந்த்சந்த் போத்ரா, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தியாகராய நகரைச் சேர்ந்த செந்தில் கே.கணபதி, சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் போத்ரா, அவர் மகன்கள் ககன் போத்ரா, சந்தீப் போத்ரா ஆகியோர் தன்னிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக புகார் செய்தார். அதன்பேரில் போத்ராவை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இந்த நிலையில், பாரிவேந்தர் அளித்த புகாரில், பணம் பறிக்கும் நோக்கத்துடன் சினிமா பைனான்சியர் போத்ரா தனக்கு தொல்லை கொடுத்ததாகவும் அவரது மகன்கள், ககன், சந்தீப் ஆகியோர் ஊடகங்கள் வாயிலாக தன்னை மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
மதனிடம் பணத்தை கொடுத்துவிட்டு தான் ஏமாற்றிவிட்டதாக தகவல்களை பரப்பியதிலும் போத்ராவுக்கு தொடர்புள்ளதாக பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications