நாயா நீ? பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு சாட்டையடி!
சென்னை: நம் ஊரில்தான் பொது சுவரில் சிறுநீரில் கோலம் போடுவார்கள் பொதுமக்கள்.
அம்மா உணவகம் இருக்கும் அளவிற்கு கூட இங்கே பொது கழிப்பிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. சிறுகிராமங்களில் மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலும் கூட பொது சுவற்றை நாறடித்து முகம் சுளிக்கச் செய்பவர்கள்தான் இங்கே அதிகம் உள்ளனர்.
இதுபோன்று பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களையும், சிறுநீர் கழிப்பவர்களைத் தடுப்பவதற்காக ஸ்வாமி படங்களை வரைந்து வைத்திருப்பார்கள்.

இல்லையெனில் அறுந்த செருப்பு, துடைப்பம் என கட்டி தொங்க விட்டிருப்பார்கள் அதையும் பார்த்து சில ஜென்மங்கள் திருந்தாமல் சிறுநீர் கழித்துச் செல்வார்கள்.
நாயா நீ?
அபராதம் விதித்தாகி விட்டது. என்னென்னவோ செய்தாகிவிட்டது. ஆனாலும் நம்மக்கள் திருந்தியபாடில்லை. சென்னையில் முக்கியமான தெரு ஒன்றில் நாய் காலை தூக்கி சிறுநீர் கழிப்பது போல படம் ஒன்றினை வரைந்து பொது இடத்தில் சிறுநீர் கழிக்கும் நீ நாயா? என்கிற ரீதியில் வாசகமும் எழுதி வைத்துள்ளனர்.
ஏனெனில் நாய்கள்தான் கண்ட இடத்தில் சிறுநீர் கழிக்கும் என்கிற தொனியில் கேட்டுள்ளனர். இந்த படம் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.
வித்தியாசமான தண்டனை
சென்னையில் இப்படி என்றால் மும்பையில் கிளீன் இந்தியா என்ற தனியார் அமைப்பு ஒன்று பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது வேகமான நீரை பாய்ச்சி அவர்களை திக்குமுக்காட செய்து வருகின்றனர்.
இதற்கெனவே காவல்துறையினர் வைத்திருப்பது போன்ற தண்ணீர் நிரப்பிய லாரி ஒன்றை இந்த அமைப்பு வாங்கியுள்ளது. இந்த லாரி, மும்பையின் முக்கிய இடங்களை வலம் வருகிறது.
பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களை கண்டால் போதும் உடனடியாக அவர்கள் மீது வேகமாக நீரை பாய்ச்சி அவர்களை நிலைதடுமாற செய்துவருகிறது. இதனால் மும்பையில் கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களின் பாடு பெரும்பாடாகி வருகிறது.
சிறுநீர் கழிக்க என்று கட்டணக்கழிவறைகள் மற்றும் இலவச கழிவறைகள் பலவற்றை அரசு அமைத்து கொடுத்திருந்தபோது, அவற்றை பயன்படுத்தாமல் விலங்குகள் போன்ற சாலையில் உள்ள சுவரோரங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்கவே நாங்கள் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்கின்றனர் இந்த அமைப்பினர்.
இந்த நடவடிக்கை சட்டப்படி சரியா அல்லது தவறா என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் தொடர்ந்து இந்த நடவடிக்கையை செய்தால் கண்டிப்பாக பொதுமக்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
A clean streets campaign in Chennai that takes the piss out of public pee-rs pic.twitter.com/6S02w5ds5H
— joeanna r fernandes (@joeannarf) December 3, 2014 பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நடவடிக்கையை வீடியோ எடுத்து யூடியூப் இணையதளத்திலும் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவும் இப்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் இந்தியாவில் எத்தனை முக்கியமான சாலைகளில் சிறுநீர் கழிக்க போதிய வசதியும், கழிவறைகளும் உள்ளன?. இதற்கு அரசின் பதில் என்ன?
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications