சென்னையில் பொதுபாதையை ஆக்கிரமித்த நித்தியானந்தா சீடர்கள்- அடித்து துரத்திய பொதுமக்கள்!
சென்னை திரிசூலம் அருகே தனிநபரின் இடத்தை ஆக்கிரமித்தும், பொது பாதையை ஆக்கிரமித்தும் கேபின்கள் அமைத்த நித்தியானந்தா சீடர்களை அப்பகுதி மக்கள் அடித்து விரட்டினர்.
சென்னை: சென்னை திரிசூலம் அருகே கோயிலுக்கு செல்லும் பொது பாதையை ஆக்கிரமித்ததாக நித்தியானந்தாவின் ஆட்களை மக்கள் அடித்து விரட்டினர்.
திரிசூலம் அருகே பச்சையம்மன் கோயில் ஒன்று உள்ளது. இங்கு இன்று காலை நித்தியானந்தாவின் சீடர்கள் வந்தனர். பின்னர் அங்கிருந்த தனிநபருக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து ஏசி வசதியுடன் கூடிய கேபின்களை வைத்தனர்.
இதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். பச்சையம்மன் கோயிலுக்கு செல்லும் பாதையை நித்தியானந்தா சீடர்கள் ஆக்கிரமித்தால் ஆத்திரமடைந்த மக்கள் அவர்களை காலி செய்யுமாறு கூறினர்.

கேபின்கள் நொறுக்கினர்
அவர்கள் கேட்காததால் அவர்களை அடித்து விரட்டிவிட்டு, அங்கு அமைக்கப்பட்ட கேபின்களை அடித்து நொறுக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு வழக்கு
நித்தியானந்தா போகுமிடமெல்லாம் நிலங்களை ஆக்கிரமிப்பது வழக்கம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்று பகுதியில் அவரது ஆண், பெண் சீடர்கள் கொட்டகை அமைத்து நித்தியானந்தாவின் சிலைகளை நிறுவினர்.

குடிசைகள் பிய்த்து...
இதைத் தொடர்ந்து வருவாய் துறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை. பின்னர் தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களின் துணையோடு வருவாய் துறை அதிகாரிகள் குடிசைகளை பிய்த்து எறிந்தனர்.

சாபம் இட்டனர்
இதைத் தொடர்ந்து பெண் சீடர்கள் போலீஸாருக்கு சாபம் இட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று திரிசூலம் பகுதியில் ஆக்கிரமிக்க சீடர்கள் முயற்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications