அவ்வளவு படபடப்பு.. தமிழக டிஜிபி மாறியது கூட தெரியாமல் கடிதம் எழுதிய பீட்டா!
பீட்டா அமைப்பு காவல்துறை இயக்குநர் பெயரில் ஓய்வு பெற்ற தமிழக முன்னாள் டிஜிபி அசோக்குமார் பெயர் இடம் பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநருக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்பட
சென்னை: ஜல்லிக்கட்டை தடைசெய்யக்கோரி பீட்டா அமைப்பு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் காவல்துறை இயக்குநர் பெயரில் ஓய்வு பெற்ற தமிழக முன்னாள் டிஜிபி அசோக்குமார் பெயர் இடம் பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பால் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவில்லை. இந்த நிலையில், ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த அனுமதி கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதனிடையே, ஜல்லிக்கட்டுத் தொடர்பாக பீட்டா இந்தியாவின் செயல் தலைவர் பூர்வா ஜோஷிபுரா, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திநாதன் மற்றும் டிஜிபி அசோக்குமார் ஆகியோருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளது. அதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு முழுமையாக தடை விதித்து அமல்படுத்த வேண்டும்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடுத்துபவர்களை கைது செய்ய வேண்டும். மேலும், தமிழக அரசு ஜல்லிக்கட்டை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
இந்த கடிதத்தில், டிஜிபி அசோக்குமாரின் பெயர் இடம்பெற்றுள்ளது. தற்போது தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் இருக்கிறார். டிஜிபி அசோக்குமார் கடந்தாண்டு ஓய்வு பெற்று விட்டார். டிஜிபி அசோக்குமார் மாறிவிட்டார் என்பது கூட தெரியாமல் பீட்டா அமைப்பு அவரின் பெயரில் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications