தினக்கூலி ரூ.100ஐ வைத்து குடும்பம் நடத்த முடியல: கலெக்டரிடம் பெண் துப்புரவு தொழிலாளர்கள் மனு
திண்டுக்கல்: தினக்கூலியாக ரூ.100 அளிப்பது போதவில்லை என்று கூறி ஊதியத்தை உயர்த்திக் கொடுக்குமாறு துப்புரவு தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கன்னிவாடி பேரூராட்சியில் துப்புரவு பணி செய்யும் 20 பெண்கள் கூட்டத்திற்கு வந்து கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
நாங்கள் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பகுதி நேர துப்புரவு தொழிலாளர்களாக பணியில் சேர்க்கப்பட்டோம். அப்போது தினக்கூலியாக ரூ.30 கொடுத்தார்கள். தற்போது முழு நேர தொழிலாளர்களாக பணி செய்து வருகிறோம். வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்து, அவற்றை 11 வகையாக பிரித்து கொடுக்கிறோம். இதற்கு தினமும் ரூ.100 கூலி கொடுக்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் இந்த சம்பளம் போதுமானதாக இல்லை. இதனால் குடும்பம் நடத்துவதில் எங்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. எனவே எங்களை பணிநிரந்தரம் செய்வதோடு, சம்பளத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications