ஐஐடி சுவர் இடிப்பு, சிறுவர் பூங்கா இழுத்து மூடல்... பிரதமர் வருகையால் அல்லோகல்லப்படும் சென்னை!
பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி கிண்டி சிறுவர் பூங்காவிற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: ராணுவ கண்காட்சியை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தருவதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐஐடி வளாகத்தில் பிரதமருக்காக சிறப்பு ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அருகில் உள்ள கிண்டி சிறுவர் பூங்காவிற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த திருவிடந்தையும் பிரம்மாண்டமான ராணுவ கண்காட்சி நேற்றைய தினம் தொடங்கியது. ரூ. 800 கோடி செலவில் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார்.
இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் திருவிடந்தை ராணுவ கண்காட்சி நிகழ்ச்சியை முடித்துவிட்டு அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் டைமண்ட் ஜூப்ளி கட்டிடத்தை திறந்து வைக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் பிரதமருக்கு கடும் எதிர்ப்புகள் இருப்பதால் சாலை வழி பயணத்தை தவிர்த்து வான்வழி பயணத்தையே பிரதமர் மேற்கொள்கிறார்.

மான்கள் நடமாடும் பகுதி சுவர்
மாமல்லபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் கிண்டி வருவதற்கு வசதியாக ஐஐடி பல்கலைக்கழக வளாக சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிபேடு அமைப்பதற்காக சென்னை ஐஐடி வளாகத்தில் இடிக்கப்ப்டடுள்ள சுற்றுச்சுவரானது மான்கள் நடமாடும் முக்கிய பகுதியின் சுற்றுச் சுவராகும்.

கிண்டி சிறுவர் பூங்காவிற்கு விடுமுறை
அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு பிரதமர் செல்ல வசதியாக ஐஐடி வளாகத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையால் புற்றுநோய் மையத்தை ஒட்டியுள்ள பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக் கூடிய கிண்டி சிறுவர் பூங்காவிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்எச்சரிக்கை நடவடிக்கை
வழக்கமாக கிண்டி சிறுவர் பூங்காவிற்கு செவ்வாய்க்கிழமைகளில் தான் விடுமுறை அளிக்கப்படும். பராமரிப்பு காரணங்களுக்காக அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால் பிரதமர் வருகையையொட்டி கிண்டி சிறுவர் பூங்கா வழியாக யாரும் அடையாறு புற்றுநோய் மையத்திற்குள் புகுந்துவிடக்கூடாது என்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வனத்துறையின் மழுப்பல் பதில்
ஆனால் தமிழ்நாடு வனத்துறையோ நிர்வாகக் காரணங்களுக்காக 12.4.2018 அன்று கிண்டி சிறுவர் பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று மழுப்பலான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. கிண்டி சிறுவர் பூங்காவிற்கு அடையாறு புற்றுநோய் மையத்திற்கும் இடையில் ஒரு சுவர் தான் வித்தியாசம் என்ற நிலையில் பிரதமர் வருகையின் போது எந்த அசம்பாவிதங்களும் நடந்துவிடாமல் இருப்பதற்காகவே கிண்டி பூங்காவிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications