அப்துல் கலாம் நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க ஜெயலலிதா இல்லையே... மேடையில் வருத்தப்பட்ட மோடி!
ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அப்துல் கலாம் மணி மண்டபம் கட்டிய தொழிலாளர்களை சிறப்பாக பாராட்டியிருப்பார் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்
ராமேஸ்வரம் : ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அப்துல் கலாம் மணி மண்டபத்தை சிறப்பாக கட்டி முடித்த தொழிலாளர்களை சிறப்பாக பாராட்டியிருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தை அடுத்த பேக்கரும்பில் ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மணி மண்டபத்தை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அப்துல் கலாமின் நினைவுச் சின்னத்தை அமைக்க ஏராளமானோர் அயராது உழைத்தனர். இந்தப் பணியை செய்துமுடித்த அனைத்து பணியாளர்களுக்கும் நான் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் கைதட்டி அவர்களின் மிகச் சிறப்பான பணிக்காக இந்த பாராட்டை தெரிவிக்கலாம் என்று கூறி கை தட்டினார்.
அப்துல் கலாமின் நினைவுச் சின்னத்தை திட்டமிட்டபடி முடிப்பதற்காக இரண்டு மணி நேரம் கூடுதலாக நேரம் பார்த்து தங்களது பணியை முடித்துள்ளனர். அதற்காகத் தொழிலாளர்கள் கூடுதல் சம்பளம் கூட வாங்கவில்லை. இதற்கான அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்ட வேண்டும்.
முன்னாள் முதல்வர் 'அம்மா' ஜெயலலிதா இந்த நிகழ்ச்சி மேடையில் இருந்திருந்தால் தொழிலாளர்களின் இந்தப் பணியை வெகுவாகப் பாராட்டியிருப்பார். இந்த விழாவில் பங்கேற்க ஜெயலலிதா இல்லையே என்பதை நினைக்கும் போதே வருத்தமாக உள்ளது என்று உருக்கமாக பேசினார் மோடி.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications