என்னா புத்திசாலித்தனம்.. அரசைப் பார்த்து வியக்கும் டாக்டர் ராமதாஸ்!
அரசியல் ரீதியிலான கருத்துக்கள் மற்றும் அரசு தொடர்பான விமர்சனங்களை பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டர் தெரிவித்து வருகின்றார்.
சென்னை: அரசியல் ரீதியிலான கருத்துக்கள் மற்றும் அரசு தொடர்பான விமர்சனங்களை பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டர் தெரிவித்து வருகின்றார்.
இந்நிலையில் டெங்கு காய்ச்சல், மதுவால் ஏற்படும் பாதிப்புகள், பேனர் விவகாரம், மற்றும் ஜெயலலிதா மரணம் என அனைத்து விவகாரங்கள் குறித்தும் தனது டிவிட்டர் பக்கத்தில் விளாசி வருகிறார் ராமதாஸ். தமிழக அரசையும் தனது டிவிட்டர் வாயிலாக அவர் நக்கலுடன் விளாசி வருகிறார்.
அரசுக்கு எதிரான அவரது விமர்சனங்களுக்கு மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் தற்போதைய முக்கிய பிரச்சனைகள் குறித்தும் தமிழக அரசு குறித்தும் டிவிட்டர் பக்கத்தில் தனது பாணியில் விமர்சித்துள்ளார் ராமதாஸ்..
|
என்ன புத்திசாலித்தனம்
டெங்குவை ஒழிக்க மதுக் குடிப்பகங்களில் பிளாஸ்டிக் கப்புக்கு தடை:நாகை ஆட்சியர்
ஏன்...டீக்கடை கப்பில் கொசு உருவாகாதா... என்ன புத்திசாலித்தனம்! என கிண்டலடிக்கிறார் ராமதாஸ்.
|
என்ன நீதி?
திருச்சியில் கட்-அவுட்களை நாளை அகற்ற உயர்நீதிமன்றம் ஆணை. விழா இன்று முடிந்து மக்கள் துன்பங்களை அனுபவித்த பின் நாளை அகற்றுவதில் என்ன நீதி? என இந்த டிவிட்டின் உயர்நீதிமன்றத்தை கேள்வி கேட்கிறார் ராமதாஸ்
|
அரசுக்கு சமர்ப்பணம்
கடலூரில் தந்தையின் குடிப்பழக்கத்தால் இரு மகள்கள் தற்கொலை: செய்தி - மதுவை கொடுத்து மக்களைக் கெடுக்கும் அரசுக்கு இவை சமர்ப்பணம்! மதுவுக்கு எதிராக தனது கட்சி போராடி வரும் நிலையில் அது குறித்த ராமதாஸின் பதிவு
|
முடிவு எப்படி இருக்கும்?
அலுவலகம் தயாராகாததால் ஜெ. மரண மர்ம விசாரணை தாமதம்: ஆரம்பமே இப்படியென்றால் முடிவு எப்படியிருக்கும் என யூகித்துக் கொள்ளலாம்! ஜெயலலிதா மரண விவகாரத்தில் அரசின் நடவடிக்கையை இந்த டிவிட்டின் மூலம் விமர்சித்துள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications