அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்- மெரீனாவில் வாகனங்கள் செல்ல மீண்டும் தடை
சென்னை : சென்னை மெரினா உட்புர சாலைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவி அனிதாவுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த கூடும் என்பதனால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், செந்துரை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா 12ம் பொது தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வால் அனிதாவுக்கு மருத்துவம் படிக்க முடியவில்லையே என்ற மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

அனிதா வெள்ளிக்கிழமையன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
மாணவி அனிதா மரணத்தை கண்டித்து மாணவர்கள் மெரீனாவில் ஒன்று கூட திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியதை தொடர்ந்து மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் ஒன்று திரண்டு மெரினாவில் கூடி உலகத்தையே தங்கள் பக்கம் திருப்பினர். அதேபோன்ற ஒரு மெரீனா புரட்சி மீண்டும் வெடிக்காமல் இருக்க சென்னை மாநகர காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மெரீனாவின் சர்வீஸ் சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஒன்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடற்கரைக்கு வந்தால் அவர்களை விரட்டியடித்தனர்.
இதனிடையே நேற்றிரவு மெரீனாவில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கம் போல வாகனங்கள் சென்றன.
நீட் தேர்வு காவு கொண்ட அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கோரி தமிழகத்தில் இன்று 4வது நாளாக போராட்டங்கள் நீடிக்கின்றன. சென்னையில் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதனையடுத்து மெரீனாவின் உட்புற சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு காற்றுவாங்க வருபவர்களையும் போலீசார் கேள்வி கேட்டு வருகின்றனர். இதனால் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது போல மெரீனா கடற்கரை காணப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications