கோபத்தில் தெருநாயின் காலை ஒடித்த வாலிபர் தலைமறைவு: கோவை போலீஸ் வலைவீச்சு
கோவை: தன்னைப் பார்த்து குரைத்த தெருநாயை பயங்கரமாகத் தாக்கியதாக வாலிபர் ஒருவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை மாநகரில் உள்ள கணபதி இராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் தினேஷ் (29). இவர் அங்குள்ள பேக்கரி அருகே நின்றிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த பிஜு(24) என்பவர், தன்னை பார்த்து குரைத்த தெருநாயை பிடித்து இழுத்து வருவதைக் கண்டுள்ளார்.
பின்னர், அத்தெருநாயை பிஜூ தடியாலும், கல்லாலும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த நாயின் கால் எலும்பு முறிந்தது. இதனால், வேதனை தாங்காத அந்த நாய் ஊளையிட்டபடி அலறி துடித்துள்ளது.
அங்கிருந்தவர்கள் இது தொடர்பாக பிஜூவிடம் தட்டிக் கேட்டுள்ளனர். ஆனபோதும், தொடர்ந்து அந்நாயைத் தாக்கியுள்ளார் பிஜூ. உடனடியாக இது தொடர்பாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதனிடம் போன் மூலம் புகார் அளித்துள்ளார் தினேஷ். மேலும் நாய் படுகாயத்துடன் இருப்பது போன்ற படத்தையும் மின்னஞ்சல் மூலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைத்தார்.
இதைப்பார்த்த போலீஸ் கமிஷனர் விசுவநாதன், தெருநாயை அடித்து துன்புறுத்திய வாலிபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சரவணம்பட்டி போலீசாருக்கு உடனடியாக உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சரவணம்பட்டி போலீசார் கால் ஒடிந்த நிலையில், படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த நாயை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக நாயை காளப்பட்டி கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே தெருநாயை அடித்து கொடுமைப்படுத்திய பிஜு தன்னுடைய வீட்டிலிருந்து தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனபோதும், தெருநாயை ஈவு இரக்கமில்லாமல் அடித்து கொடுமைப்படுத்தியதற்காக பிஜு மீது, பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சரவணம்பட்டி போலீசார் தேடி வருகிறார்கள்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications