கருணாநிதியின் உடல் நலத்தை விசாரித்தார் பொன். ராதாகிருஷ்ணன்
கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து உடல்நலம் குறித்து விசாரித்தார் பொன் ராதாகிருஷ்ணன்.
Recommended Video
சென்னை: கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் உடல் நலத்தை பொன் ராதாகிருஷ்ணன் விசாரித்தார்.
கருணாநிதிக்கு நெஞ்சில் பொருத்தப்பட்டிருந்த டிரக்கியாஸ்டமி கருவி அகற்றப்பட்டு புதிய கருவி பொருத்தப்பட்டது. இதில் சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்பட்டதால் கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இது தொடர்பாக பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் அவரது உடல்நலம் குறித்து நேற்றைய தினம் நேரில் சந்தித்து விசாரித்தனர்.
இதில் அவரது உடல் சீராக உள்ளது என்று நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.
அதுமட்டுமல்லாமல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மற்றும் கர்நாடக முதல்வர்கள் ஆகியோர் ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
தற்போது மத்திய அமைச்சர் பொன் ராதாரகிருஷ்ணன், தி இந்து பத்திரிகையாளர் ராம், நடிகர் விக்ரம் உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.