பொங்கல்: சென்னை டூ நெல்லை, நாகர்கோவிலுக்கு 22 சிறப்பு ரயில்கள்: முன்பதிவு இன்று துவக்கம்
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு 22 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 19 ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று துவங்குகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாகவும் சென்னை எழும்பூர்-திருநெல்வேலி, நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள், அதிவிரைவு சிறப்பு ரயில்கள், பிரீமியம் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த ரயில்களின் விவரம் வருமாறு,

திருநெல்வேலி-எழும்பூர்
திருநெல்வேலி-எழும்பூர் சிறப்பு ரயில் (வ.எண்.06001), திருநெல்வேலியில் இருந்து வருகிற 8-ந் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக சென்னை எழும்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (06002), எழும்பூரில் இருந்து வருகிற 9-ந் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலிக்கு அடுத்த நாள் காலை 9.45 மணிக்கு செல்லும்.
இதேபோல், திருநெல்வேலி-எழும்பூர் சிறப்பு ரயில் (06003), திருநெல்வேலியில் இருந்து வருகிற 9-ந் தேதி இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11.55 மணிக்கு எழும்பூர் வந்துசேரும். மறுமார்க்கமாக எழும்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (06004), எழும்பூரில் இருந்து வருகிற 10-ந் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.
நாகர்கோவில்-எழும்பூர்
நாகர்கோவில்-எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (06005), நாகர்கோவிலில் இருந்து வருகிற 11-ந் தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் பிரீமியம் அதிவிரைவு சிறப்பு ரயில் (00601), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 12-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
திருநெல்வேலி-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (06006), திருநெல்வேலியில் இருந்து வருகிற 12-ந் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
பிரீமியம் அதிவிரைவு சிறப்பு ரயில்
சென்னை எழும்பூர்-திருநெல்வேலி பிரீமியம் அதிவிரைவு சிறப்பு ரயில் (00602), எழும்பூரில் இருந்து வருகிற 13-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
திருநெல்வேலி-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (06007), திருநெல்வேலியில் இருந்து வருகிற 14-ந் தேதி காலை 9.40 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
சென்னை எழும்பூர்-திருநெல்வேலி பிரீமியம் அதிவிரைவு சிறப்பு ரயில் (00603), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 14-ந் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.
எழும்பூர்-திருநெல்வேலி
திருநெல்வேலி-சென்னை எழும்பூர் பிரீமியம் சிறப்பு ரயில் (06004), திருநெல்வேலியில் இருந்து வருகிற 17-ந் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
சென்னை எழும்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (06008), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 18-ந் தேதி இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.
நாகர்கோவில்-சென்னை எழும்பூர் பிரீமியம் அதிவிரைவு சிறப்பு ரயில் (00605), நாகர்கோவிலில் இருந்து வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.
அதிவிரைவு சிறப்பு ரயில்
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (06009), எழும்பூரில் இருந்து வருகிற 19-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.
திருநெல்வேலி-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (06010), திருநெல்வேலியில் இருந்து வருகிற 19-ந்தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை சென்னை எழும்பூருக்கு 7.20 மணிக்கு வந்து சேரும்.
சென்னை எழும்பூர்-திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (06011), எழும்பூரில் இருந்து வருகிற 20-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.
திருநெல்வேலி
திருநெல்வேலி-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06012), திருநெல்வேலியில் இருந்து வருகிற 22-ந்தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
திருநெல்வேலி-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06013), திருநெல்வேலியில் இருந்து வருகிற 23-ந்தேதி இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
நாகர்கோவில்-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06014), நாகர்கோவிலில் இருந்து வருகிற 25-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
டிக்கெட் முன்பதிவு
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (06015), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 26-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
சென்னை எழும்பூர்-திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (06016), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 27-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.
மேற்கூறப்பட்ட அனைத்து ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
பிரீமியம் ரயில்
சென்னை எழும்பூர்-திருநெல்வேலி பிரீமியம் சிறப்பு ரயில் (00606), எழும்பூரில் இருந்து வருகிற 23-ந் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது.
சென்னை எழும்பூர்-திருநெல்வேலி பிரீமியம் சிறப்பு ரயில் (00607), எழும்பூரில் இருந்து வருகிற 24-ந் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி செல்லும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு வருகிற 9-ந் தேதி தொடங்கும்.
திருநெல்வேலி-சென்னை எழும்பூர் பிரீமியம் சிறப்பு ரயில் (00608), திருநெல்வேலியில் இருந்து வருகிற 26-ந் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு வருகிற 11-ந் தேதி தொடங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications