மனைவியை தற்கொலைக்கு தூண்டிய பஸ் கண்டக்டர், கள்ளக்காதலிக்கு 10 ஆண்டு சிறை
ஈரோடு: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் அவரது கள்ளக்காதலிக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கெஞ்சனூர் மூலக் கடை பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன் செல்வன் (27). தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக பணி புரிந்து வந்த செல்வனுக்கு, தனது பேருந்தில் தினமும் பயணம் செய்து வந்த ஸ்ரீமதியுடன் காதல் ஏற்பட்டது.

இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள எரக்காட்டுபாளையத்தில் இருவரும் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். வழக்கம் போல செல்வன் தனது நடத்துனர் பணியையும், ஸ்ரீமதி மில் பணியையும் தொடர்ந்து வந்தார்.
இந்நிலையில் செல்வனுக்கு தனது பேருந்தில் தினமும் பயணம் செய்யும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ராமர் கோவில் வீதியை சேர்ந்த நிஷா என்கிற நதியா பேகம் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நிஷா ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவருக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.
நாளடைவில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. செல்வனும், நிஷாவும் பல்வேறு இடங்களில் தனிமையில் சுற்றியது ஸ்ரீமதிக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக செல்வனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ஸ்ரீமதி. ஆனால், ஸ்ரீமதியை வீட்டிற்கே வந்து மிரட்டிச் சென்றுள்ளார் நிஷா. இதற்கு செல்வனும் உடந்தையாக இருந்துள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீமதியை அவரது தோழியின் கணவருடன் இணைத்து பேசி வந்துள்ளார் செல்வன். இதனால் மனமுடைந்த ஸ்ரீமதி சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வன் தலைமறைவானார்.
இதுபற்றி தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வனை தேடி வந்தனர். இந்தநிலையில் செல்வன், அவரது கள்ளக்காதலி நிஷாவுடன் வந்து சரண் அடைந்தார்.
இவர்கள் 2 பேர் மீதும் ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி என்.திருநாவுக்கரசு நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அதில் ஸ்ரீமதியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக செல்வன் மற்றும் நிஷா என்கிற நதியா பேகத்துக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications