ஜெ.வை போல் கருணாநிதிக்கும் மெரினாவில் இடம் தாருங்கள்- ராகுல் வலியுறுத்தல்

ஜெயலலிதாவை போல் கருணாநிதிக்கும் மெரினாவில் இடம் தர வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு இடம் தர வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

உடல்நல குறைவால் மறைந்த கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசிடம் அனுமதி கோரியது திமுக. ஆனால் தமிழக அரசோ அங்கு சட்ட சிக்கல் உள்ளதால் காந்தி மண்டபத்தில் காமராஜர் சமாதிக்கு அருகில் இடம் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தது.

Rahul Gandhi demands to give place for Karunanidhi in Marina

இதை எதிர்த்து திமுக நீதிமன்றத்தை நாடியது. தமிழக அரசை கண்டித்து தொண்டர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை என்று ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதே போல் ராகுல் காந்தியும் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர வேண்டும்.

மக்களின் குரலாக எதிரொலித்த ஜெ.வை போல் கருணாநிதிக்கும் இடம் கொடுக்க வேண்டும். தமிழக மக்களின் குரலாக இருந்த கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதே சரியானது. இந்த துக்கமான தருணத்தில் தமிழகத்தின் ஆட்சியாளர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வர் என்று நம்புகிறேன் என்று ராகுல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+