டிசம்பர் 12ஆம் தேதி கட்சிப் பெயரை அறிவிக்கிறாரா ரஜினிகாந்த்?
நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் தனது பிறந்தநாளில் கட்சிப் பெயரை அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத இறுதியில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதன்மூலம் டிசம்பரில் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது தயாராக இருங்கள் போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றார். தனது அரசியல் பிரவேசத்தை அவர் இவ்வாறு கூறுவதாக அனுமானிக்கப்பட்டது/
தான் ஒரு பச்சை தமிழன் என்றும் தமிழகத்தில் இருந்து தூக்கிப் போட்டல் இமயமலையில் தான் விழுவேன் வேறு எந்த மாநிலத்திற்கும் செல்ல மாட்டேன் என்றார். மேலும் அரசியல் பலமே எதிர்ப்புதான் என்று கூறி தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார்.

ரஜினிக்கு எதிர்ப்பு
ரஜினி அரசியலுக்கு வருவதற்கு சீமான், வேல்முருகன், அன்புமணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

நான் மறுக்கவில்லை
அப்போது, அரசியலுக்கு நான் வருவேன் என என்னை சந்திப்பவர்கள் கூறுவதை மறுக்கவில்லை என்றார். மேலும் அரசியலுக்கு வருவது குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்றம் ரஜினிகாந்த் கூறினார்.

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறேன்
அரசியலுக்கு வருவது பற்றி முடிவெடுக்கும் போது தெரிவிப்பேன் என்றும் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். செப்டம்பர் அல்லது அக்டோபர் இறுதியில் ரசிகர்களை சந்திக்கிறேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ரசிகர்களிடம் ஆலோசிக்கவா?
கடந்த மாதம் தான் ரசிகர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் அடுத்த 6 மாதத்துக்குள் ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக கூறியிருப்பது அரசியல் பிரவேசம் குறித்தும் கட்சிக்குறித்தும் ஆலோசிக்கவே என கூறப்படுகிறது.

டிசம்பர் 12ல் அறிவிப்பு?
அடுத்த ஒன்றரை மாதத்தில் அதாவது டிசம்பர் 12ஆம் தேதியான ரஜினியின் பிறந்தநாளில் கட்சிக்குறித்து ரஜினி தனது அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் ரஜினியின் அறிவிப்பு வெளியாகிறதா என்று..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications