மோடியைச் சந்திக்க ரஜினி திட்டம்?
சென்னை: ரசிகர்களை பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ரசிகர் மன்றத்தினரை முழுமையாக சந்தித்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களைச் சந்தித்துள்ளார். முதல் கட்டமாக சில மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார். ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார். அடுத்து மீதமுள்ள மாவட்டத்தினரையும் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின்போது ரசிகர் மன்றத்தினருடன் விரிவாக பேசியுள்ளார் ரஜினி. அவர்களிடம் மனம் விட்டுப் பேசியுள்ளார். அவர்கள் சொன்ன கருத்துக்களையும் கவனத்துடன் உள்வாங்கிக் கொண்டாராம்.

ரஜினி சந்திப்பு
ரசிகர்கள் சந்திப்பின்போது அவர்கள் சொன்ன பல விஷயங்களையும் கவனமாக கேட்டுக் கொண்ட ரஜினி, தானும் அவர்களுக்கு பல யோசனைகளையும், சில வேலைகளையும் கூறியுள்ளாராம்.

டேட்டா பேஸ்
தமிழகம் குறித்த டேட்டா பேஸ் அதில் ஒன்று. அதாவது தமிழகத்தின் அரசியல், பொருளாதாரா, சமூக சூழல் குறித்த பல விவரங்களை தொகுத்துத் தருமாறு ரசிகர்களிடம் கேட்டுள்ளார் ரஜினி என்று கூறுகிறார்கள்.

என்ன பிரச்சினை
தமிழகத்தின் தலையாய பிரச்சினைகள் என்ன என்பது அதில் முக்கியமான ஒன்று சொல்கிறார்கள். பிரச்சினைகள் குறித்த பட்டியல், அதற்கான தீர்வுகள், அதற்கு செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து லிஸ்ட் கேட்டுள்ளாராம்.

பிரதமரைச் சந்திக்கலாம்
இந்த பட்டியல் கைக்குக் கிடைத்தவுடன், தமிழகத்தின் தேவைகள் குறித்த கோரிக்கை மனுவுடன் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்கலாம் என்று சொல்கிறார்கள்.

பாஜக என்ன செய்யும்
ஒரு வேளை கோரிக்கை மனுவுடன் ரஜினி பிரதமரைச் சந்தித்தால், அந்தக் கோரிக்கைகளை மத்திய பாஜக அரசு உடனடியாக நிறைவேற்றுமா இல்லையா என்பதைப் பொறுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் அமையலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications