கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு; ஊழல்வாதிகளுக்கு செருப்பு: ராமதாஸ் பஞ்ச்
சென்னை: கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு; ஊழல்வாதிகளுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
குன்னூர் தொகுதி திமுக வேட்பாளராக முபாரக் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை மாற்றக்கோரி திமுக சிட்டிங் எம்.எல்.ஏ. ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த சூழலில் முபாரக்கை பரிந்துரை செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் காரை மறித்து செருப்பு வீசப்பட்டுள்ளது. இது குறித்தும், நாட்டு நடப்பு குறித்தும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
செருப்பு வீச்சு
திமுக முன்னாள் அமைச்சர் மீது செருப்பு வீச்சு: கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு; ஊழல்வாதிகளுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு போலிருக்கிறது!
|
அதிமுக வேட்பாளர்கள்
பல இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் விரட்டியடிப்பு: நல்ல தொடக்கம் தான்... முடிவு சுபமாகவே இருக்கும்!
|
தண்ணீர்
இன்னும் 35 ஆண்டுகளில் தண்ணீரை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்: ஆய்வு - ஆற்று மணலை நல்லா கொள்ளையடிங்க... இன்னும் சீக்கிரமே இந்த நிலை வரும்!
|
சந்திரபாபு நாயுடு
ஒன்றாம் வகுப்பு முதல் ஐஐடி அடிப்படைப் பாடம்: சந்திரபாபு நாயுடு - பாராட்டத்தக்க முயற்சி, அன்புமணிக்கு இணையான தொலைநோக்கு சிந்தனை!