திருச்சி திமுக மாநாடு: டெல்லி செங்கோட்டை வடிவில் நுழைவு வாயில்
சென்னை: திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள திமுக மாநாடு நடைபெற உள்ள நுழைவு வாயில் டெல்லி செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.மாநாட்டின் பந்தல் முகப்பு நாடாளுமன்றம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,
தி.மு.க. 10-வது மாநில மாநாடு திருச்சி பிராட்டியூர் அண்ணா நகரில் பிப்ரவரி 15, 16-ந்தேதிகளில் நடக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த திருச்சி மாநாடு நிச்சயம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கூட்டணி பற்றிய அறிவிப்பு, வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு என்று பல்வேறு எதிர்பார்ப்புகளை தாங்கியுள்ளதால் இந்த மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

200 ஏக்கர் நிலத்தில்
தி.மு.க. மாநில மாநாட்டுக்காக பிராட்டியூர் ரெட்டைமலை அருகே 10 லட்சம் பேர் அமரும் வகையில், சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விறுப்பான பணிகள்
திருச்சி தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மாநாடு வரவேற்புக்குழு தலைவருமான கே.என்.நேரு, மாநாட்டு திடலில் தங்கியிருந்து இரவு, பகலாக மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு வருகிறார்.
ஸ்டாலின் ஆய்வு
இதற்கிடையே கடந்த 6-ந்தேதி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு திடலுக்கு சென்று பணிகளை பார்வையிட்டார். மேலும், மாநாட்டு அலுவலகத்தையும் திறந்து வைத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து தற்போது 50 சதவீத பணிகள் நிறைவுபெற்று உள்ளன.
டெல்லி செங்கோட்டை
மாநாட்டு நுழைவு வாயில் டெல்லி செங்கோட்டை வடிவில் அமைக்கப்படுகிறது. மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல் 1100 அடி நீளத்திலும், 600 அடி அகலத்திலும், மாநாட்டு மேடை 200 அடி நீளத்திலும், 80 அடி அகலத்திலும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.
ராமஜெயம் பெயரில்
மாநாட்டு கொடி மேடையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 90 அடி உயரத்தில் ஒரே கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. கொடி மேடை மறைந்த கே.என்.ராமஜெயம் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமைப்பு
மாநாட்டு பந்தலின் முகப்பு தோற்றம் பாராளுமன்ற வடிவில் உருவாகிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தங்கும் வகையில், மாநாட்டு மேடையின் அருகே ஓய்வு அறையும் உருவாக்கப்படுகிறது. மேலும் தி.மு.க. மாநாட்டு முகப்பு பந்தல் அமைக்கும் பணிகளை சினிமா ஆர்ட் கலைஞர்கள் முகாமிட்டு கவனித்து வருகிறார்கள். பந்தல், மேடை, முகப்பு அமைப்பதற்கே பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications