கொத்துக் கொத்தாக சரிந்து விழுந்த கட்டடம்… மீண்டவர்கள் பேட்டி
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு எப்படி விழுந்தது, தாங்கள் எப்படி உயிர் தப்பினோம் என்பது குறித்து உயிருடன் மீண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது வாழ்நாள் முழுவதும் இதை மறக்க முடியாது என்று கூறிய அவர்கள், கடவுள் புண்ணியத்தால்தான் தாங்கள் உயிருடன் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
விழுந்த கட்டடத்திற்குள் சிக்கித் தவித்த இவர்களை மீட்புப் படையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

28ம் தேதி பயங்கரம்
மவுலிவாக்கத்தில் ஜூன் 28ம் தேதி அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து போனது. மண்ணோடு மண்ணாக தரைமட்டமாகிப் போனது. இதில் சிக்கியவர்களை தொடர்ந்து மீட்டு வருகின்றனர்.

திகில் அனுபவம்
மீட்கப்பட்டவர்களில் ஒருவரான மதுரை திருமங்கலம், மருதமுத்து என்ற கட்டுமானத் தொழிலாளர் கூறுகையில், சம்பவத்தன்று வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று இடிச்சத்தம் கேட்டது.

கொத்துக் கொத்தாக விழுந்த சிமெண்ட் துகள்கள்
தொடர்ந்து கட்டிடத்தின் மேலிருந்து சிமெண்ட் துகள்கள் கொத்துக்கொத்தாக விழுந்தன.

கண்மூடித் திறப்பதற்குள்
கண்மூடி கண் திறப்பதற்குள் கட்டிடம் சரிந்து விழுந்தது. மண் குவியலுக்கு அடியில் நான் குப்புற விழுந்து கிடந்தேன். கை, கால்களை கூட அசைக்க முடியவில்லை. எங்கும் ஒரே இருட்டு.

கடவுள் அருளால் பிழைத்தேன்
எப்படி மீட்கப்பட்டேன்? எப்படி மருத்துவமனையில் வந்தேன்? எவ்வாறு தேறினேன்? என்பதெல்லாம் எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் பிழைத்திருக்கிறேன் என்றால் அது கடவுளின் அருளால் தான். வாழ்நாள் முழுவதும் இந்த சம்பவத்தை மறக்க மாட்டேன் என்றார்.

தூண்களுக்கிடையே சிக்கிய கந்தசாமி
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. 53 வயதான இவர் விபத்து நடந்த இடத்தில் உள்ள மரக்கடையில் பணியாற்றுகிறார். அவர் கூறும்போது, கட்டடம் சரிந்து எங்களது கடையின் மீது விழுந்தது. இதில் கடையின் 2 தூண்களுக்கு நடுவில் இடிபாடுகளுக்கிடையில் நான் சிக்கிக்கொண்டேன். என்னால் நகரக்கூட முடியவில்லை. தற்போது வரை பிழைத்தேன் என்பதை நான் நம்பவில்லை என்றார்.

நெடுமாறன் நேரில் பார்த்தார்
இதற்கிடையே, மீட்புப் பணிகளை உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ. நெடுமாறன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், இயக்குநர் கெளதமன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications