ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ராணி மேரி கல்லூரியில் மின்னணு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் பரபரப்புடன் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 24ஆம் தேதி ஞாயிறன்று வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது.
ஆர்.கே. நகரில் நேற்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நேற்று மாலையே மெரினா கடற்கரைசாகாமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணிமேரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அனைத்து இயந்திரங்களும் தனி அறையில் வைக்கப்பட்டு அந்த அறை சீலிடப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளதையடுத்து அரசியல் கட்சியினர் மற்றும் வெளி நபர்கள் உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது. வரும் 24ம் தேதி வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது.

ராணி மேரி கல்லூரி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு மத்திய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வெளியாட்கள் யாரும் நுழைந்து விட முடியாத அளவுக்கு ராணிமேரி கல்லூரி போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இரவு பகலாக பாதுகாப்பு
ராணிமேரி கல்லூரியில் நேற்று இரவில் இருந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஷிப்டு முறையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுவரை அங்கு துணை ராணுவத்தினர் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

ஆர்.கே. நகர் யாருக்கு
24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு அங்கு வேட்பாளர்கள், முகவர்கள், ஊடகத்தினர் வருவதற்காக தனித்தனியே வழிகள் அமைக்கப்பட்டு தடுப்புகள் போடப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் 77 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாக்குகள் யாருக்கு பதிவாகியுள்ளன. வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்லப்போவது யார் என்று நாளை மறுதினம் தெரிந்து விடும்.

தீவிர கண்காணிப்பு
இதனிடையே சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், ஆர்.கே.நகர். தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் ஆய்வில் ஈடுபட்டனர். ஆர்.கே.நகர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 19 சுற்றுகளாக நடைபெறும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறினார். மேலும் சென்னை ராணி மேரி கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, வாக்கு எண்ணிக்கை முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications