சேலத்தில் ரூ.25 கோடி மதிப்பிலான பச்சை மரகதலிங்கம் மீட்பு.. பெண் உள்பட 5 பேர் கைது
சேலம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சை மரகதலிங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம்: சேலம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சை மரகதலிங்கத்தை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒரு பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அருகே தாரமங்கலம் வழியாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் கடத்தப்படுவதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையில் தாரமங்கலம் அருகே மாறு வேடத்தில் போலீசார் முகாமிட்டு இருந்தனர்.

அப்போது அங்குள்ள பால்பண்ணை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த காரை மறித்து போலீசார் சோதனையிட்டனர். அதில் ஏழு கிலோ எடை கொண்ட பச்சை மரகதலிங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த மரகதலிங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.25 கோடி இருக்கும் என ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை தாரமங்கலம் காவல்நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி!












Click it and Unblock the Notifications