அண்ணாநகர் சரவணபவனில் அனாதையாக கிடந்த ரூ.25 லட்சம்.. போலீசில் ஒப்படைத்த ஊழியருக்கு பாராட்டு
ஓட்டலில் கிடந்த ரூ.25 லட்சம் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.
Recommended Video

சென்னை: அண்ணாநகர் சரவணபவனில் கேட்பாரற்று கிடந்த 25 லட்சம் ரூபாய் பணப்பையினை ஓட்டல் ஊழியர் ரவி, பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்ததையடுத்து, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அண்ணாநகர் ரவுண்டானாவில் சரவண பவன் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றிரவும் ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக அதிகம் பேர் வந்திருந்தனர். அப்போது இரவு 10,30 மணியளவில் ஓட்டலின் ஊழியர் ரவி என்பவர் ஒரு மேஜை மீது ஒரு பை ஒன்று கிடப்பதை கண்டார்.

அந்த பையை திறந்துபார்த்தபோது கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, அந்த பணப்பையினை ஓட்டலின் மேனேஜரிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து ஊழியர் ரவி மற்றும் மேனேஜர் ரவி இருவரும் அந்த பணப்பையினை அண்ணாநகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கட்டுக்கட்டாக பணத்தினை கண்டும் அதனை மேனேஜரிடம் பத்திரமாக ஒப்படைத்த ஊழியர் ரவியின் நேர்மையை இன்ஸ்பெக்டர் வெகுவாக பாராட்டினார். பின்னர் ரவிக்கு ஒரு கைக்கடிகாரத்தினையும் வெகுமதியாக அளித்தார். இதனால் ஊழியர் ரவியின் நேர்மைக்குக்கு காவல்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், குவிந்து வருகின்றன.
ஒப்படைக்கப்பட்ட பணம் குறித்து இதுவரை யாரும் வரவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பணம் தேடி வருபவர்களிடம் உரிய விசாரணை மேற்கொண்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications