அதிமுக எம்எல்ஏக்கள் சிறைவைப்பு... மீட்டு தாருங்கள் - சண்முகநாதன் எம்எல்ஏ புகார்
ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை மீட்டு தர வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ எஸ்.பி சண்முகநாதன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா தரப்பினரால் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை மீட்டு தர வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ சண்முகநாதன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 8ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற எம்எல்ஏக்கள் அனைவரும் சொகுசுப் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டு ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் அழைத்து சென்ற போது தப்பி வந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ சண்முகநாதன், நேராக ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, கூவத்தூரிலுள்ள ஒரு சொகுசு விடுதியில் வலுக்கட்டாயமாக சிறைப்பிடிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்தார் எஸ்.பி. சண்முகநாதன்.
இந்தநிலையில் இன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த எஸ்.பி. சண்முகநாதன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 8ஆம் தேதி எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்த பின்னர் எங்களை கொத்தடிமைகள் போல நடத்தினார்கள் என்றார். எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கினார்கள். பின்னர் சொகுசு பஸ்சில் அழைத்து சென்றனர். நான் அதிலிருந்து தப்பி வந்து விட்டேன் என்றார்.
என்னுடைய புகாரை காவல்துறை ஆணையர் பெற்றுக்கொள்ளவில்லை. எனவே அலுவலகத்தில் உதவி ஆணையரிடம் அளித்து விட்டு வந்திருக்கிறேன் என்று கூறினார். விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்.பி. சண்முகநாதன் கூறியுள்ளார். எம்எல்ஏக்களுக்கு வசதியான விடுதி இருக்கும் போது அவர்களை என் ரிசார்ட்டில் தங்க வைக்க வேண்டும் என்றும் சண்முகநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications